உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர்.

மாற்றுத்திறனாளி மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்- கலெக்டர் தகவல்

Published On 2022-11-09 10:06 GMT   |   Update On 2022-11-09 10:06 GMT
  • முதுகலை கல்வி பயிலும் மாணவ- மாணவிகளுக்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.
  • இறுதித்தேர்வில் 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

தஞ்சாவூர்:

தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளிமாணவ-மாணவிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் கல்வி உதவித்தொகை வழங்கி வருகிறது.

1 முதல் 5 வகுப்பு வரை பயிலுவோருக்கு ரூ.1000, 6ம் வகுப்பு முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவமாணவியருக்கு ரூ.3000, ஒன்பதாம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை கல்வி பயிலும் மாணவமாணவியருக்கு ரூ 4000, இளங்களை கல்விபயிலும் மாணவமாணவியருக்கு ரூ 6000 மற்றும் முதுகலை கல்வி பயிலும் மாணவ-மாணவியருக்கு ரூ.7000 வழங்கப்படுகிறது.

பார்வையற்றவர்கள் 9 முதல் 12 வகுப்பு வரை பயின்று வந்தால் கூடுதலாக ரூ.3000 வாசிப்பாளர் உதவித்தொகை மற்றும் பட்டப்படிப்பு படித்து வந்தால் 5000 கூடுதலாக வாசிப்பாளர் உதவித்தொகை வழங்கப்படுகிறது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் 2022-23ம் கல்வி ஆண்டிற்கு மாற்றுத்தி றனாளிகளுக்கான கல்வி உதவித்தொகைமற்றும் பார்வைற்றோருக்கான வாசிப்பாளர் உதவித்தொகை வழங்க விண்ணப்பம் பெறப்பட்டு வருகிறது.

1 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாற்றுத்தி றனாளிகள் சென்ற ஆண்டு தேர்ச்சி பெற்று இருக்கவேண்டும்.

9 வகுப்பு மேல்க ல்வி பயிலும் மாற்றுத்திறனாளிகள் சென்ற ஆண்டு இறுதித்தேர்வில் 40 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்பெற்றிருக்க வேண்டும். வேறு எந்த துறையிலும் கல்வி உதவித்தொகை பெறாதவராக இருக்கவேண்டும்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவமாணவிகள்கல்வி உதவித்தொகை பெற 30.11.2022க்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும் பார்வையற்றோர்கள் வாசிப்பாளர்உ தவித்தொகை பெற தனியாக ஒரு விண்ணப்பம் சமர்ப்பிக்கவேண்டும்.

கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில்க ல்வி பயிலும் நிறுவனத்தில் சான்று பெற்று மாற்றுத்திறனா ளிகளுக்கான அடையாள அட்டை நகல், மதிப்பெண்சான்று, வங்கி கணக்கு பாஸ்புத்தகம் நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இதுசம்பந்தமா னவிவரங்களை பெற 04362-236791 என்ற தொலைபேசி எண்ணில் தொடா;பு கொள்ளலாம்.

தஞ்சாவூர் மாவட்டத்தில் கல்வி பயிலும் மாற்றுத்திறனாளி மாணவ-மாணவிகள் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை 30.11.2022க்குள் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர்அலுவலக வளாகம், தஞ்சாவூர் என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக விண்ணப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News