உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து நாசம்: ரூ.1.5 லட்சம் பொருட்கள் சேதம்

Published On 2022-08-10 08:39 GMT   |   Update On 2022-08-10 08:39 GMT
  • சங்கராபுரம் அருகே தீ விபத்தில் வீடு எரிந்து நாசமானதால் ரூ.1.5 லட்சம் பொருட்கள் சேதமடைந்தன.
  • தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.

கள்ளகுறிச்சி:

கள்ளகுறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சமத்துவபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜா மனைவி முத்துலட்சுமி. இவர் தனது வீட்டை பூட்டி விட்டு கோவிலுக்கு சென்ற நிலையில் அவரது வீடு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இது குறித்த தகவல் அறிந்த சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ரமேஷ்குமார் (பொறுப்பு) தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த துணிகள், மின்சாதன பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் பணம் உள்ளிட்ட மொத்தம் ரூ.1.5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து சேதமானது.

Tags:    

Similar News