உள்ளூர் செய்திகள்
கோத்தகிரியில் பலத்த மழைக்கு வீடு இடிந்தது
- கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் நேற்று காலை வரை விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது.
- அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4,100 வழங்க நடவடிக்கை எடுத்தனர்.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் கோத்தகிரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு பரவலாக மழை பெய்தது. கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில் இரவு முதல் நேற்று காலை வரை விட்டு, விட்டு பலத்த மழை பெய்தது. இதனால் வீட்டின் சுவற்றில் ஏற்பட்ட ஈரப்பதம் காரணமாக, கோத்தகிரி அருகே கெங்கரை முத்தமிழ் நகரை சேர்ந்த பாக்யம் என்பவரது வீட்டின் ஒரு பகுதி இடிந்து விழுந்து சேதம் அடைந்தது. இதுகுறித்து தகவலறிந்த வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் தாசில்தார் உத்தரவின் பேரில், வீடு இடிந்து பாதிக்கப்பட்டவருக்கு அரசு வழங்கும் நிவாரண தொகையான ரூ.4,100 வழங்க நடவடிக்கை எடுத்தனர்.