உள்ளூர் செய்திகள்

கூடலூர் அருகே 2 வீடுகளை இடித்து தள்ளிய காட்டு யானைகள் கூட்டம்

Published On 2022-07-13 09:55 GMT   |   Update On 2022-07-13 09:55 GMT
  • யானைகள் வனத்திற்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது.
  • யானை வீட்டை இடிப்பதை அறிந்து வீட்டில் இருந்தவர்கள், தப்பி அருகில் உள்ள வீட்டுக்கு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்

ஊட்டி:

நீலகிரி மாவட்டம், கூடலூா் தாலுகா, புளிய ம்பா–றை அடுத்துள்ளது கத்தரித்தோடு கிராமம். இந்த கிராமத்தையொட்டி அடர்ந்த வனப்பகுதி உள்ளது.

இதனால் அடிக்கடி வனவிலங்குகள் வனத்தை விட்டு வெளியேறி அங்குள்ள விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுகிறது.

இந்த நிலையில் சம்பவத்தன்று காட்டு யானைகள் கூட்டம் வனத்தை விட்டு வெளியேறி கிராம பகுதிகளுக்குள் புகுந்தது. நீண்ட நேரமாக அங்கேயே சுற்றி திரிந்த காட்டு யானை கூட்டம் அந்த பகுதியில் உள்ள தவமணி என்பவரது வீட்டை தாக்கி சேதப்படுத்தியது.

சத்தம் கேட்டு தவமணி எழுந்து பார்த்தபோது யானை நின்றிருந்தது. இதனால் அதிர்ச்சியான அவர் சத்தம் போட்டார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து யானைகளை விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் யானைகள் வனத்திற்குள் செல்லாமல் குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி திரிந்தது.

பின்னர் அங்கிருந்து காட்டு யானைகள் வெளி யேறியது. இதையடுத்தே பொதுமக்கள் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதேபோல் அருகே உள்ள அட்டிக்கொல்லி கிராமத்தில் புகுந்த காட்டு யானை தா்மலிங்கம் என்பவரின் வீட்டையும் இடித்து சேதப்படுத்தியது.

யானை வீட்டை இடிப்பதை அறிந்து வீட்டில் இருந்தவர்கள், தப்பி அருகில் உள்ள வீட்டுக்கு சென்றனர். இதுகுறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News