உள்ளூர் செய்திகள்

வாகன ஓட்டிகளுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.

சீர்காழியில், ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-05-17 09:14 GMT   |   Update On 2023-05-17 09:14 GMT
  • ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
  • பேரணியானது ரெயில் நிலையம் வழியாக சென்று மீண்டும் புதிய பஸ் நிலையத்தில் முடிவடைந்தது.

சீர்காழி:

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் போக்குவரத்து துறை, மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் சார்பில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

சீர்காழி ஆர்டிஓ அர்ச்சனா, பைக் ஓட்டுனர்களுக்கு ஹெல்மெட் அணிவதின் அவசியம் குறித்து,

நடந்த விழிப்புணர்வு பேரணியை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

பின்னர் வாகன ஓட்டுனர்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி பேசினார்.

மயிலாடுதுறை வட்டார போக்குவரத்து அலுவலர் நாகராஜன், ,சீர்காழி மோட்டார் வாகன இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன், சீர்காழி காவல் இன்ஸ்பெ க்டர் சிவகுமார், தாசில்தார் செந்தில்குமார் கலந்து கொண்டு பேசினர்.

100க்கும் மேற்பட்ட ஹெல்மெட் அணிந்த பைக் ஓட்டிகள் சீர்காழி புதிய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்பட்டு கொள்ளிடம் முக்கூட்டு, ரயில் நிலையம் பழைய பேருந்து நிலையம் வழியாக மீண்டும் புதிய பேருந்து நிலையத்தில் முடிவுற்றது.

இந்த பேரணியில் 100க்கும் மேற்பட்ட நபர்கள் ஹெல்மெட் அணிந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இதில் ஓட்டுனர் பயிற்சிப் பள்ளியை சேர்ந்த, வீரபா ண்டியன், முத்து, ஜெயா, மற்றும் ராஜா பங்கேற்றனர்

Tags:    

Similar News