உள்ளூர் செய்திகள்

22-ந் தேதி நடக்கிறது: கள்ளக்குறிச்சியில் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்- மாவட்ட கலெக்டர் தகவல்

Published On 2023-09-20 07:35 GMT   |   Update On 2023-09-20 07:35 GMT
  • பிற்பகல் 2 மணி வரை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தலைமையில் நடைபெற உள்ளது.
  • விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர்.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கி ல்வேளாண்மை உழவர் நலத்துறை சார்பில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 22- ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 11 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார்தலைமையில் நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட த்திலுள்ள வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் வேளாண்மை சார்ந்த துறைகளான தோட்டக்கலைத்துறை, வேளாண்விற்பனை மற்றும் வேளாண் வணிகம், வேளாண்மை பொறியியல் துறை, கால்ந டை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய் துறை, ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை, வங்கி யாளர்கள் மற்றும் பிறசார்பு துறை அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயிகளின் குறைகள் மற்றும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க உள்ளனர். எனவே, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பொது கோரிக்கைகள் மற்றும் தனிநபர் குறைகள் குறித்த மனுக்களை நேரடியாக அளித்து பயனடையுமாறு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News