உள்ளூர் செய்திகள்

விருத்தாசலத்தில் பெய்த பலத்த மழை

Published On 2022-10-21 07:25 GMT   |   Update On 2022-10-21 07:25 GMT
  • இது நாளை (22-ந் தேதி) தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
  • அதிகாலையில் நகரம் முழுவதும் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவியது.

கடலூர்:

அந்தமான் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தற்போது வலுப்பெற்றுள்ளது. இது காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவெடுத்து உள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் மழை பெய்து வருகிறது. இது நாளை (22-ந் தேதி) தாழ்வு மண்டலமாக மாறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. அதன்பின் 23-ந் தேதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும். பின்னர் கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இது 24-ந் தேதி புயலாக உருவெடுக்க கூடும் என கூறப்படுகிறது.

இதையொட்டி இன்று அதிகாலை 2 மணி முதல் விருத்தாசலம் நகரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. அதிகாலை தொடங்கிய மழை காலை 7 மணி வரை தொடர்ந்து பெய்த வண்ணம் இருந்தது. மழை காரணமாக அதிகாலையில் நகரம் முழுவதும் 1 மணி நேரத்திற்கு மேலாக மின்வெட்டு நிலவியது.

Tags:    

Similar News