உள்ளூர் செய்திகள்
தளவாய்புரம் பஞ்சாயத்தில் சுகாதார விழிப்புணர்வு பேரணி
- எழில்மிகு கிராமம் நோக்கிய தமிழகம் என்ற வாசகத்துடன் தளவாய்புரம் மெயின் ரோட்டில் பேரணி நடைபெற்றது.
- பேரணிக்கு பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தலைமை தாங்கினார்.
ஏர்வாடி:
கிராமம் முழு சுகாதாரமாக இருத்தல் வேண்டும் என்பதனை வலியுறுத்தி தளவாய்புரம் பஞ்சாயத்தில் பயிற்சி முகாம் மற்றும் பேரணி நடைபெற்றது. அதன் அடிப்படையில் வீட்டிற்கு வீடு நவீன கழிவறை அமைத்தல், தெருக்களை சுத்தமாக பேணி பாதுகாத்தல், சாக்கடைகளை தூர் வாருதல், அனைத்து இருப்பிட பகுதிகளையும் தூய்மை படுத்துதல் போன்ற நிலைகளை வலியுறுத்தி எழில்மிகு கிராமம் நோக்கிய தமிழகம் என்ற வாசகத்துடன் தளவாய்புரம் மெயின் ரோட்டில் பேரணி நடைபெற்றது.
பேரணிக்கு பஞ்சாயத்து தலைவர் மதன்ராஜ் தலைமை தாங்கினார். வட்டார ஒருங்கிணைப்பாளர் எட்வின், சுகாதார ஊக்குனர்கள், ஊராட்சி செயலர், பணித்தள பொறுப்பாளர் மற்றும் தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.