உள்ளூர் செய்திகள்

ஜெ.எஸ்.எஸ்.கல்லூரி சார்பில் சுகாதார விழிப்புணர்வு முகாம்

Published On 2022-07-09 08:39 GMT   |   Update On 2022-07-09 08:39 GMT
  • ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் ஊட்டி அரசு கலைகல்லூரியில் நடைபெற்றது.
  • ஏற்பாடுகளை வேதியியல் துறையின் இணை பேராசிரியர்கள் முனைவர்கள் ஜீபி மற்றும் கோமதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் உதகை ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் வேதியியல் துறையின் சார்பாக மாதவிடாய் ஆரோக்கியம் மற்றும் சுகாதார விழிப்புணர்வு முகாம் ஊட்டி அரசு கலைகல்லூரியில் நடைபெற்றது.

ஜெ.எஸ்.எஸ் மருந்தாக்கியல் கல்லூரியின் பேராசிரியர் முனைவர் ஆனந்தவிஜயகுமார் தலைமை தாங்கினார்.கல்லூரியின் முதல்வர்(பொறுப்பு)முனைவர் எபநேசர், மகபேறுசிறப்பு மருத்துவர் பவ்யா மற்றும் கலைகல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் கனகாம்பாள் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர். ஒருங்கிணைப்பாளர் முனைவர் கோமதி வரவேற்றார்.

இதில் ஒருங்கிணைப்பாளர் முனைவர் ஜூபி, பார்மகாலேஜ் துறை தலைவர் முனைவர் பிரவின், ஈசா யோக மையத்தின் உதவியாளர் சிவக்குமார், முனைவர் கிருஷ்ணவேணி, பேராசிரியர் அருண், விரிவுரையாளர் பிரியதர்ஷனி உள்பட பலர் பங்கேற்றனர்.இதற்கான ஏற்பாடுகளை வேதியியல் துறையின் இணை பேராசிரியர்கள் முனைவர்கள் ஜீபி மற்றும் கோமதி ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.

Tags:    

Similar News