உள்ளூர் செய்திகள்

புளியமரத்தில் தூக்குபோட்டு தொழிலாளி தற்கொலை

Published On 2023-02-08 15:43 IST   |   Update On 2023-02-08 15:43:00 IST
  • கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது.
  • புளியமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கிருஷ்ணகிரி, 

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்துள்ள சிட்ரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர் மங்குநாத் (வயது34). இவருக்கு திருமணமாகி மனைவி உள்ளார்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்து காணப்பட்ட மங்குநாத் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம், மத்திகிரி கால்நடை பண்ணையில் உள்ள புளியமரத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மத்திகிரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News