உள்ளூர் செய்திகள்

பாளையில் ஒரு கல்லூரியில் குரூப்-4 மாதிரி தேர்வு எழுதியவர்கள்.

நெல்லையில் குரூப்-4 மாதிரி தேர்வு

Published On 2022-07-17 09:11 GMT   |   Update On 2022-07-17 09:11 GMT
  • தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு வருகிற 24-ந் தேதி நடைபெறுகிறது.
  • மாதிரி தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார்.

நெல்லை:

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் குரூப்-4 தேர்வு வருகிற 24-ந் தேதி( ஞாயிற்றுக் கிழமை) நடைபெறுகிறது.

மாதிரி தேர்வு

இதனை ஒட்டி நெல்லையில் குரூப்-4 தேர்வு எழுத உள்ள தேர்வர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடைபெற்று வருகிறது.

நெல்லை மாவட்ட மைய நூலகம் மற்றும் வாசகர் வட்டம் சார்பில் இன்று குரூப்-4 மாதிரி தேர்வு நடைபெற்றது. பாளையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நடந்த இந்த தேர்வை மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ தொடங்கி வைத்தார்.

500 தேர்வர்கள்

முன்னதாக நடந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்ட தலைவர் மரிய சூசை தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கணபதி சுப்ரமணியம் வரவேற்றார். முதன்மை நூலகர் வயலட் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் எம்.பி. விஜிலா சத்யானந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தேர்வில் நெல்லை, தென்காசி, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட தேர்வர்கள் கலந்து கொண்டு ஆர்வமுடன் தேர்வு எழுதினர்.இதில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு மதியம் நெல்லை மாநகர கிழக்கு மண்டல போலீஸ் துணை கமிஷனர் சீனிவாசன் பரிசு வழங்கினார். முதல் 8 இடம் பிடித்த தேர்வர்களை அவர் பாராட்டி பரிசு வழங்கினார்.

Tags:    

Similar News