உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்.

வருகிற 1-ந்தேதி நடக்கிறது திண்டுக்கல் மாவட்டத்தில் கிராம சபை கூட்டம்

Published On 2023-10-26 05:35 GMT   |   Update On 2023-10-26 05:35 GMT
  • திண்டுக்கல் மாவட்ட த்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.
  • கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் மாவட்ட த்திலுள்ள அனைத்து கிராம ஊராட்சிகளிலும் வருகிற 1-ந்தேதி உள்ளாட்சிகள் தினத்தன்று கிராம சபைக் கூட்டம் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளது.

கிராம சபைக் கூட்டத்தில் வழக்கமான விவாதப் பொருட்கள் தவிர, கிராம ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவினம், கிராம ஊராட்சியின் தணி க்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் விநியோகத்தினை உறுதி செய்வது, இணையவழி மனைப்பிரிவு மற்றும் கட்டிட அனுமதி வழங்குதல், அயோடின் கலந்த உப்பை பயன்படுத்துதல், கிராம வளர்ச்சி திட்டம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம், பிரதம மந்திரி ஊரகக் குடியிருப்புத் திட்டம், அனைவருக்கும் வீடு கணக்கெடுப்பு, தூய்மை பாரத இயக்கம் (ஊரகம்), திறந்த வெளியில் மலம் கழித்தலற்ற நிலையை தக்க வைத்தல், திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கை கள், பிளாஸ்டிக்கை தவிர்த்து பொருட்கள் பயன்படுத்து வதை ஊக்குவித்தல், பிளாஸ்டிக் கழிவு மேலா ண்மை குறித்த விழிப்பு ணர்வு, பொது அறிவிப்புகள், ஜல் ஜீவன் இயக்கம், மாற்றுத் திறனாளிகளுக்கான கணக்கெடுப்பு உரிமைகள் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் குறித்து விவாதித்தல் மற்றும் இதர பொருட்கள் குறித்து விவாதிக்கப்படும்.

எனவே, ஊராட்சிப் பகுதியில் உள்ள மக்கள் கிராம சபைகளில் தவறாது கலந்து கொண்டு விவாத த்தில், தங்களது கருத்து க்களை தெரிவிக்கலாம் என மாவட்ட கலெக்டர் பூங்கொடி தெரிவித்து ள்ளார்.

Tags:    

Similar News