உள்ளூர் செய்திகள்
நாமக்கல் மாவட்டத்தில் நாளை 322 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.
- அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
நாமக்கல்:
நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 322 கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் கிராம ஊராட்சியில் நிர்வாகம் மற்றும் பொது நிதி செலவீனம், கிராம ஊராட்சியின் கணக்கு தணிக்கை அறிக்கை, சுத்தமான குடிநீர் வினியோகம், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், கிராம வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பணிகள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன. இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.