உள்ளூர் செய்திகள்
நீலகிரி மணியபுரத்தில் கிராமசபை கூட்டம்
அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் அதிகரட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட மணியபுரம் கிராமத்தில் கிராமசபை கூட்டம் நடை பெற்றது. பேரூராட்சி தலைவர் பேபிமுத்து முன்னிலை வகித்தார். வார்டு உறுப்பினர் செல்வகுமாரி, செயல்அலுவலர் நட்ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிராமசபை கூட்டத்தில் நடைபாதை வசதி, கழிவுநீர் கால்வாய் தடுப்பு சுவர், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் ஆகியவை தொடர்பாக மனுக்கள் பெறப்பட்டது.