உள்ளூர் செய்திகள்

கோத்தகிரியில் சரியான நேரத்தில் இயங்காத அரசு பஸ்கள்

Published On 2023-09-10 09:50 GMT   |   Update On 2023-09-10 09:50 GMT
  • குறித்த நேரத்தில் பஸ்கள் வராததால் பொதுமக்கள், பயணிகள் தவிப்பு
  • கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களை சரியான நேரத்தில் இயக்க கோரிக்கை

அரவேணு, 

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து பல்வேறு வழித்தடங்களில் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதன்மூலம் பயணிகள் குறைந்த கட்டணத்தில் பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து மேட்டுப்பாளையம், கோவைக்கு உரிய நேரத்தில் அரசு பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. எனவே பொதுமக்கள் மற்றும் பயணிகள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இதனால் கோத்தகிரி பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்களை சரியான நேரத்தில் இயக்க போக்குவரத்து நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புளுமவுண்டன் நுகர்வோர் பாதுகாப்பு சங்கம் கோரிக்கை விடுத்து உள்ளது.

Tags:    

Similar News