உள்ளூர் செய்திகள்

அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

கடைக்கோடி பகுதியிலும் அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடைகிறது - அமைச்சர் பெருமிதம்

Published On 2022-07-12 10:40 GMT   |   Update On 2022-07-12 10:40 GMT
  • அரசின் பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு தான் முதல்-அமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.
  • பள்ளி கட்டிடங்கள் புதுமையாக கட்டி மாணவர்களின் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கும்பகோணம்:

திருப்பனந்தாள் அருகே மனக்குண்ணத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக்கு ரூ.17.32 லட்சம் மதிப்பிலான புதிய பள்ளி கட்டிட பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திறந்து வைத்தார்.கல்யாணசுந்தரம் எம்.பி, அரசு தலைமை கொறடா கோவி செழியன், ஒன்றிய குழு தலைவர் தேவி ரவிச்சந்திரன்,ஒன்றிய குழு துணை தலைவர் அண்ணாதுரை ஆகியோர் குத்துவிளக்கேற்றினர். விழாவில் அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யா மொழி பேசியதாவது:-தமிழகத்தின் கடைக்கோடி பகுதியிலும் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் சென்றடையும் வகையில் இந்த அரசு செயல்பட்டு வருகிறது.

அரசின் பல்வேறு துறைகள் இருந்தாலும் பள்ளிக்கல்வித்துறைக்கு தான் முதலமைச்சர் அதிக நிதி ஒதுக்கீடு செய்துள்ளார்.அந்த வகையில் பெரும்பாலான பள்ளி கட்டிடங்கள் புதுமையாக கட்டி மாணவ -மாண வர்களின் கனவை நினைவாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இவ்வாறுஅவர் பேசினார்.

Tags:    

Similar News