உள்ளூர் செய்திகள்

வாள் சண்டை போட்டியில் அரசு பள்ளி மாணவன் சாதனை

Published On 2023-02-17 09:57 GMT   |   Update On 2023-02-17 09:57 GMT
  • மாணவர்கள் நான்கு பேர் வாள் சண்டை போட்டியில் கலந்து கொண்டனர்.
  • மூர்த்தி மாநில அளவில் 3-வது இடம் பிடித்துள்ளான்.

சூளகிரி,

சூளகிரி ஊராட்சியில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப்பள்ளியில் சூளகிரி சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து 1600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.

22 - 23-ம் ஆண்டிற்கான மாநில அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் கடந்த 10, 11, 12, ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இந்த போட்டிகளுக்கு சென்று சூளகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் நான்கு பேர் வாள் சண்டை போட்டியில் கலந்து கொண்டனர்.இவர்களில் மாணவன் செல்வன் மூர்த்தி மாநில அளவில் 3-வது இடம் பிடித்து பள்ளிக்கும், மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்தான்.

மாணவர்களை நாகர்கோவில் அழைத்து சென்று பதக்கத்துடன் திரும்பிய உடற்கல்வி இயக்குனர் மகேஷ்வரன், பெருமாள் முதுகலை ஆசிரியர் செந்தமிழ் செல்வன் பட்டதாரி ஆசிரியர்கள், ஆசிரியர்கள் ராமசந்திரன், சதிஷ்,கோவிந்தராஜ், ஆகியோருக்கும் பாராட்டு தெரிவித்தனர். 

Tags:    

Similar News