உள்ளூர் செய்திகள்

தென்காசியில் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2022-12-28 13:59 IST   |   Update On 2022-12-28 13:59:00 IST
  • தென்காசி மாவட்டத்தில் 35 அரசு அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
  • கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை முருகன் தலைமை தாங்கினார்.

தென்காசி:

சேலத்தில் கடந்த 17-ந்தேதி நடைபெற்ற தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில பிரதிநிதித்துவ பேரவை அறைகூவல் தீர்மானத்தின்படி தென்காசி மாவட்டத்தில் 35 அரசு அலுவலகங்களின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். தென்காசி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் திருமலை முருகன் தலைமை தாங்கினார். மாவட்ட இணை செயலாளர் மாடசாமி கோரிக்கைகள் குறித்த விளக்கவுரையாற்றினார்.

மேலும் தமிழ்நாடு வருவாய் துறை அலுவலரும், சங்க மாவட்ட செயலாளர் சீனிப்பாண்டி, மாவட்ட நிதி காப்பாளர் ஜாக்டோ-ஜியோ இசக்கி துரை, தமிழ்நாடு பேரூராட்சி ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் கனகராஜ், தமிழ்நாடு வேலைவாய்ப்பு துறை ஊழியர் சங்கம் மாநில பொதுச் செயலாளர் மார்த்தாண்ட பூபதி,

தமிழ்நாடு தொழிற்பயிற்சி அலுவலர் சங்க நெல்லை மண்டல செயலாளர் சேகர் , தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாவட்ட துணை தலைவர் கணேசன், தமிழ்நாடு புள்ளியியல் சார்நிலை அலுவலர், சங்க மாநில துணை தலைவர் ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட செயலாளர் துரைசிங் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். மாவட்ட இணை செயலாளர் ராஜ் நன்றி கூறினார்.

Tags:    

Similar News