உள்ளூர் செய்திகள்
அரசு பஸ் டிரைவர் தூக்கு போட்டு சாவு
- மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
- முருகேசன் குண்டல்பட்டி சாலையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தருமபுரி
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள சாமிசெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 43). அரசு பேருந்து டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு திருமணமாகிய நிலையில் 1 மகன், 1 மகள் உள்ளனர். இந்நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இதனால் இவரது மனைவி கோபித்து கொண்டு தனது தாய் வீட்டில் குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தார்.
இந்நிலையில் முருகேசன் குண்டல்பட்டி சாலையில் உள்ள மரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தருமபுரி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.