உள்ளூர் செய்திகள்

சங்கரன்கோவில் அருகே உடலில் காயங்களுடன் பெண் குழந்தை மர்ம மரணம்

Published On 2023-06-10 07:47 GMT   |   Update On 2023-06-10 07:47 GMT
  • கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் மாடசாமி இறந்து விட்டார்.
  • குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மது இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் காந்தி நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி இசக்கியம்மாள் (வயது 25). இவர்களுக்கு 4 வயதில் மது என்ற பெண் குழந்தை இருந்தது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் மாடசாமி இறந்து விட்டார். இதையடுத்து இசக்கியம்மாள் கரிவலம் வந்தநல்லூர் இந்திரா காலனியில் உள்ள அவரது சகோதரி மாலதி வீட்டின் அருகே வாடகை வீட்டில் குழந்தை மது மற்றும் தனது தாயார் ராமாத்தாளுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் வழக்கம்போல் நேற்று இசக்கியம்மாள், மதுவை அருகிலுள்ள வீட்டில் விட்டு விட்டு வேலைக்கு சென்றார். சிறிது நேரத்தில் மது தனது தாயை பார்க்க வேண்டும் என கூறி அழுததாக கூறப்படுகிறது. இதில் திடீரென மயங்கிய அந்த குழந்தையை உறவினர்கள் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

ஆனால் அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் மது இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து கரிவலம் வந்தநல்லூர் போலீசார் விசாரணை நடத்தினர். குழந்தையின் உடலில் காயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் மதுவின் உடல் பிரேத பரிசோதனைக்காக நெல்லை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News