உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி காந்தி ரோடு வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கருட சேவை இன்று காலை நடந்தது.

பண்ருட்டி காந்தி ரோடு வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை

Published On 2022-06-14 09:14 GMT   |   Update On 2022-06-14 09:14 GMT
  • பண்ருட்டி காந்தி ரோடு வரதராஜ பெருமாள் கோவிலில் கருட சேவை நிகழ்ச்சி நடந்தது.
  • உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு 108மூலிகைதிரவியங்களில்சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து இன்று காலை சிறப்பு மலர் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஆலயத்தின் முன்பு உதய கருட சேவை நடைபெற்றது.

கடலூர்:

பண்ருட்டி காந்தி ரோடு வரதராஜ பெருமாள் கோவிலில் வைகாசி பவுர்ணமி தினத்தை முன்னிட்டு கருட சேவை இன்று காலை நடந்தது இதனை முன்னிட்டு நேற்று மாலை உற்சவர் வரதராஜ பெருமாளுக்கு 108மூலிகைதிரவியங்களில்சிறப்பு திருமஞ்சனம் நடந்தது. தொடர்ந்து இன்று காலை சிறப்பு மலர் வரதராஜ பெருமாள் கருட வாகனத்தில் எழுந்தருளி ஆலயத்தின் முன்பு உதய கருட சேவை நடைபெற்றது.

பின்னர் மாடவீதி வீதி உலா நடைபெற்றது மாடவீதியில் பொதுமக்கள் திரண்டு இருந்து கருட சேவையை கண்டு களித்து பெருமாளை உற்சாகமாக வரவேற்றனர். வழிநெடுகவீடுவீடாகபக்தர்களுக்கு அருள் பிரசாதங்கள்வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வைகாசி மாத பவுர்ணமி கருடசேவை உற்சவதாரர் எஸ்விஜுவல்லர்ஸ் அதிபர்கள் பி.எஸ்.வைரக்கண்ணு, எஸ்.வி.அருள், ஏ.சண்முநிஷாந்த் ஆகியோர் செய்தனர்.

Tags:    

Similar News