உள்ளூர் செய்திகள்

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

விநாயகர் சிலைகள் காவிரி துலாக் கட்டத்தில் கரைப்பு

Published On 2022-09-02 14:32 IST   |   Update On 2022-09-02 14:32:00 IST
  • பல்வேறு கோவில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டிற்காக வைக்கப்பட்டன.
  • குதிரை விநாயகர், எலி விநாயகர், வீர விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 3 முதல் 7 அடி வரை உள்ள பலவண்ண நிறத்தில் பக்தர்களை கவரும் வகையில் இருந்தது.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு கோயில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தனர்.

மயிலாடுதுறையில் 41 இடங்களில் வைக்கப்பட்ட பிள்ளையார் சிலைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு காவிரி துலாக்கட்டத்தில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சதூர்த்தி விழாவையொட்டி மயிலாடுதுறை மாவ ட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய நான்கு தாலுக்காவில் உள்ள பல்வேறு கோயில்களில் 286 விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பொதுமக்கள் வழிபா ட்டிற்காக வைக்கப்பட்டன.

மயிலாடுதுறையில் செம்மங்குளம் முனீஸ்வரர் ஆலயத்தில் எழுச்சி விநாயகர், மாயூரநாதர் கீழவீதி;

பரிவார விநாயகர் மற்றும் காமதேனு விநாயகர், குதிரை விநாயகர், எலி விநாயகர், வீர விநாயகர் என பல்வேறு வடிவங்களில் 3 அடி முதல் 7 அடிவரை உள்ள பலவண்ண நிறத்தில் பக்தர்களை கவரும் வகையில்;

விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டிருந்தன.

இந்து முன்னணி சார்பில் மாவட்ட தலைவர் சரன்ராஜ் தலைமையில் பிரதிஷ்டை செய்யப்பட்டு பக்தர்களின் வழிபாட்டுக்கு வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் அந்தந்த பகுதிகளில் உள்ள நீர்நிலைகளில் கரைக்க ப்பட்டு வருகின்றன.

மயிலாடுதுறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் பிரதிஷ்டை செய்து வைக்கப்பட்ட விநாயகர் சிலைகள் 3-ஆம் நாளான நேற்று ஊர்வமாக முக்கிய நகர சாலை வழியாக துலா கட்டம் வந்தடைந்தது.

இதில் சிறப்பு அழைப்பாளர் பா.ஜ.க. மாவட்ட தலைவர் அகோரம், இந்து முன்னணி பொதுச் செயலாளர் சுவாமிநாதன், முத்துக்குமார், பாஜக ஒருங்கிணைப்பாளர் நாஞ்சில் பாலு, நகர தலைவர் வினோத் உள்ளிட்ட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News