உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

தேனி மாவட்டத்தில் சூதாடிய கும்பல் கைது

Published On 2022-06-23 05:04 GMT   |   Update On 2022-06-23 05:04 GMT
  • தேனி அருகே உப்பார்பட்டி பகுதியில் வீரபாண்டி போலீசார் ரோந்து சென்றனர்.
  • சூதாடிய 3 பேரை கைது செய்து சீட்டுக்கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

தேனி:

தேனி அருகே உப்பார்பட்டி பகுதியில் வீரபாண்டி போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது அங்கிருந்த காலி இடத்தில் சூதாடிய கணேசன்(62), அமர்நாத்(35), விமல்குமார், மாரிமுத்து(46) ஆகிய 4 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து பணம் மற்றும் சீட்டுக்கட்டை பறிமுதல் செய்தனர். இதேபோல் கண்டமனூர் போலீசார் எம்.சுப்புலாபுரம் பெரியஓடை பகுதியில் ேராந்து சென்றனர்.

அப்போது அங்கு சூதாடிய சரவணராஜா(41), சுப்பிரமணி(67), மகாராஜன்(46) ஆகிய 3 பேரை கைது செய்து சீட்டுக்கட்டு மற்றும் பணத்தை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News