உள்ளூர் செய்திகள்

பணம் வைத்து சூதாடிய6 பேர் பிடிபட்டனர்

Published On 2023-02-19 15:10 IST   |   Update On 2023-02-19 15:10:00 IST
  • அங்கு சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.
  • இதையடுத்து அவர்கள் 6 பேரையும் மத்தூர் போலீசார் கைது செய்தனர்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் போலீசார் கமலாபுரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சிலர் பணம் வைத்து சூதாடியது தெரிய வந்தது.

அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த மாதேஷ், சுப்பிரமணி, மாரியப்பன், விநாயகமூர்த்தி, ராஜ்குமார், கேசவன் ஆகியோர் என தெரியவந்தது.

இதையடுத்து அவர்கள் 6 பேரையும் மத்தூர் போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News