பொள்ளாச்சியில் குடிபோதையில் ஒருவரையொருவர் அரிவாளால் வெட்டிய நண்பர்கள்
- 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
- 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியை சேர்ந்தவர் ஜோன்ஷா (வயது 26). டிரைவர். சம்பவத்தன்று இவரும் கிட்டுப்பிள்ளை வீதயை சேர்ந்த பஸ் டிரைவர் ஜெயராம் (36) ஆகியோர் அந்த பகுதியில் உள்ள சிக்கன் கடை அருேக வைத்து மது குடித்தனர்.
அப்போது ஜோன்ஷாவிடம் ஜெயராம் நீ முத்துராம் என்பவருடன் பழக கூடாது என கூறினார். அப்போது அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயராம் தான் மறைத்து வைத்து இருந்த அரிவாளை எடுத்து ஜோன்ஷாவின் கழுத்து, கை ஆகிய பகுதிகளில் வெட்டினார்.
அப்போது ஜோன்ஷா, ஜெயராமிடம் இருந்து அரிவாளை பறித்து அவரை திருப்பி வெட்டினார். இதில் அவருக்கு இடுப்பு பகுதியில் வெட்டு விழுந்தது. சிறிது நேரத்தில் 2 பேரும் ரத்த வெள்ளத்தில் மயங்கினர். இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் 2 பேரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து 2 பேரும் பொள்ளாச்சி மேற்கு போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் 2 பேர் மீது போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.