உள்ளூர் செய்திகள்

மாற்றதிறனாளி பயனாளிக்கு இலவச மனை பட்டா ஆணையினை மாவட்ட கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார்.

கடலூரில் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா: கலெக்டர் பாலசுப்பிரமணியம் வழங்கினார்

Published On 2023-04-18 09:36 GMT   |   Update On 2023-04-18 09:42 GMT
  • பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலு வலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது
  • மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலு வலர்களுக்கு உத்தரவிட்டார்.

கடலூர்:

கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொதுமக்கள் குறைகேட்பு நாள் கூட்டம் அனைத்துத்துறை அலு வலர்களுடன் கலெக்டர் பாலசுப்ரமணியம் தலை மையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, மாற்றுதிற னாளிகள் உதவித் தொகை, பட்டா, நிலஅளவை போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்கள் நேரில் அளித்தனர். குறைதீர்வு கூட்டத்தில் பட்டா தொடர்பான 47 மனுக்களும், முதியோர் உதவித்தொகை தொடர்பாக 26 மனுக்களும், வேலை வாய்ப்பு தொடர்பாக 19 மனுக்களும், காவல்துறை தொடர்பாக 32 மனுக்களும், மாற்றுதிறனாளி நல அலுவலகம் தொடர்பாக 22 மனுக்களும், இதர மனுக்கள் 147 ஆக மொத்தம் 293 மனுக்கள் வரப்பெற்றன. பொதுமக்கள் அளித்த மனுக்களை தீர ஆராய்ந்தும், கள ஆய்வு செய்தும், விதிமுறைகளுக்குட்பட்டும் துரிதமாக நடவடிக்கை மேற்கொண்டு மனுதார ருக்கு தீர்வு வழங்க வேண்டும்.

மேலும் உதவித்தொகை, கழிப்பறை, வீடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தான மனுக்களை உடனடியாக பரிசீலனை செய்து தீர்வு காணவேண்டும். மனுக்கள் மீது காலம் தாழ்த்தாமல் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என அலு வலர்களுக்கு உத்தரவிட்டார். குறைதீர்வு கூட்டத்தின் வாயிலாக கடலூர் வட்டத்தை சேர்ந்த 4 மாற்று திறனாளி பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா விற்கான ஆணையை கலெக்டர் பாலசுப்ரமணியம் வழங்கினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகன், தனித்துணை ஆட்சியர் கற்பகம் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News