உள்ளூர் செய்திகள்
ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் கட்ட அடிக்கல் நாட்டு விழா
- பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
- விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்துள்ளோம்.
தஞ்சாவூர்:
ஸ்ரீவிஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் நிறுவனரும் ஓம் ஸ்ரீ நாகம்மாள் அறக்கட்டளை, அகில இந்திய சாதுக்கள் இயக்கம் மாநிலத் தலைவருமான டாக்டர் ஸ்ரீராம ரெங்கசாமி சுவாமிகள் வெளியிட்டுள்ள தீபாவளி வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது :-
தரணி போற்றும் தஞ்சாவூரில் விரைவில் பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற உள்ளது.
இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டி பணியை தொடங்கி வைக்க அழைப்பு விடுத்துள்ளோம்.
அனைவருக்கும் பகவான் ஸ்ரீ விஸ்வகர்மா காயத்ரி தேவி கோவில் சார்பில் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.