உள்ளூர் செய்திகள்
கோவை பேராசிரியர் வீட்டில் முன்னாள் மாணவர் தற்கொலை
- வேல்முருகன் கருத்து வேறுபாடு காரணமாக தனது பெற்றோர் மற்றும் அண்ணனுடன் பேசாமல் இருந்ததாக தெரிகிறது.
- புகாரின் பேரில் கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை,
சேலம் மாவட்டம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது 24). இவர் கோவைபுதூரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் படித்துள்ளார். வேல்முருகன் கருத்து வேறுபாடு காரணமாக தனது பெற்றோர் மற்றும் அண்ணனுடன் பேசாமல் இருந்ததாக தெரிகிறது.
தான் படித்த கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றும் ஒருவரது வீடு கோவை கே.ஜி. சாவடியில் உள்ளது. சம்பவத்தன்று பேராசிரியர் வீட்டுக்கு வேல்முருகன் வந்தார். அங்கு அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்த புகாரின் பேரில் கே.ஜி.சாவடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.