உள்ளூர் செய்திகள்
மத்தூர் அரசு மாணவர்களுக்குகாவல்துறை சார்பில் பரிசளிப்பு
- மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸ் பாய்ஸ் என்ற தலைப்பில் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைத்தப்பட்டது.
- இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அரசு தொடக்கப் பள்ளியில் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளி மாணவர்களை ஊக்கிவிக்கும் வகையில் பொங்கல் தை திருநாளை முன்னிட்டு மத்தூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் தலைமையில் போலீஸ் பாய்ஸ் என்ற தலைப்பில் மத்தூர் அரசு தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடைத்தப்பட்டது.
இதில் போட்டியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகன் பரிசுகள் வழங்கி பாராட்டினார்.
இந்நிகழ்ச்சியில் எஸ்.ஐ.ஆனந்தன் மற்றும் போலீசார், பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பள்ளியின் தலைமையாசிரியை ஆரோக்கியமேரி செய்திருந்தார்.