தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளிகளுக்கான கால்பந்து போட்டி- சாகுபுரம், திருச்செந்தூரில் தொடங்கியது
- தக்க்ஷின் சகோதயா சங்க பள்ளிகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.
- கால்பந்து போட்டி டி.சி.டபிள்யூ. விளையாட்டு மைதானம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
ஆறுமுகநேரி:
தென்மண்டல சி.பி.எஸ்.இ. பள்ளி–களுக்கு இடையிலான கால்பந்து போட்டி சாகுபுரத்தில் தொடங்கியது.
நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய தென்மாவட்டங்களை உள்ளடக்கிய தக்க்ஷின் சகோதயா சங்க பள்ளிகளுக்கு இடையிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் வெவ்வேறு இடங்களில் நடந்து வருகின்றன.
இதில் கால்பந்து போட்டி டி.சி.டபிள்யூ. விளையாட்டு மைதானம் மற்றும் திருச்செந்தூர் டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியியல் கல்லூரி மைதானம் ஆகிய இடங்களில் நடக்கிறது.
முதல் போட்டியை சாகுபுரம் டி.சி.டபிள்யூ. நிறுவனத்தின் மூத்த செயல் உதவி தலைவர் சீனிவாசன் தொடங்கி வைத்தார். இதில் 22 பள்ளிகளைச் சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட அணிகள் கலந்து கொள்கின்றன.
நிகழ்ச்சியில் சாகுபுரம் கமலாவதி சீனியர் செகண்டரி பள்ளியின் முதல்வர் அனு ராதா. தலைமையாசிரியை சுப்புரத்தினா, அட்மினிஸ்ட்ரேட்டர் மதன், டி.சி.டபிள்யூ. மக்கள் தொடர்பு துறையைச் சேர்ந்த ஒயிட்பீல்டு மற்றும் விஜய், கணபதி, திருவேங்கடத்தான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.