உள்ளூர் செய்திகள்

வேளாங்கண்ணியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏழைகளுக்கு உணவு வழங்கபட்டது.

மதநல்லிணக்கத்தை வலியுறுத்தி ஏழைகளுக்கு உணவு

Published On 2023-11-13 09:49 GMT   |   Update On 2023-11-13 09:49 GMT
  • வேளாங்கண்ணியில் உதவிக்கரங்கள் அமைப்பு சார்பில் உணவு வழங்கபட்டது.
  • 500க்கும் மேற்பட்டோருக்கு உணவு வழங்கி மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.

நாகப்பட்டினம்:

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி பேராலயம் முன் உதவிக்கரங்கள் அமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜாதி மத வேதமின்றி மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி கிறிஸ்டின் சார்பில் டேவிட், வேளாங்கண்ணி இஸ்லாமிய பைத்துல் மால் தலைவர் ஜலால், இந்து சமயம் சார்பில் வேளாங்கண்ணி ரஜதகிரீஸ்வரர் ஆலய குருக்கள் நீலகண்டன், உள்ளிட்ட 3ம் மதங்களை சேர்ந்த அவர்கள் மத முறைப்படி ஜெபம்,மந்திரம் ஓதி,தொழுகை நடத்தி வேளாங்கண்ணி பேரால யத்தை சுற்றி உள்ள ஏழை எளிய ஆதரவற்ற முதியோர்களுக்கு 500க்கும் மேற்பட்டோருக்கு பிரியாணி, முட்டை, தண்ணீர் பாட்டில், வாழைப்பழம் இனிப்புகள் வழங்கி மத நல்லிணக்க விழாவாக கொண்டாடப்பட்டது.

இந்த நிகழ்வு பொது மக்களை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

இதில் உதவிகரங்கள் நிறுவனத் தலைவர் ஆண்டனி பிராங்கிளின் ஜெயராஜ்,தலைமை தாங்கினார், முன்னாள் பேரூராட்சி தலைவர் ஜுலியட் அற்புதராஜ்,

ஆரிய நாட்டுத் தெரு பஞ்சாயத்தார்கள் சார்லஸ், பாத்திராஜ், டேவிட், ஸ்டாலின் முன்னிலை வகித்தனர்.

லயன்ஸ் சங்க நிர்வாகிகள் பஜீருல்லா, பாலசு ப்ரமணியன், மைக்கேல், ஆரோக்கியராஜ், ரோட்டரி சங்க நிர்வாகிகள் சாமிநாதன், சட்டநாதன், கௌதமன், இன்னர் வீல் சங்க தலைவி கலைச்செல்வி ,

அன்பே கடவுள் தொண்டு நிறுவன நிர்வாகிகள் பீட்டர்ராஜ், சாமிநாதன், இஸ்லாமிய நற்பணி மன்ற நிர்வாகிகள் மற்றும் உதவிக்கரங்கள் நிர்வாகிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tags:    

Similar News