உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்

திண்டுக்கல்லில் பூக்களின் விலை தொடர்ந்து உயர்வு

Published On 2022-08-02 08:17 GMT   |   Update On 2022-08-02 08:17 GMT
  • திண்டுக்கல்லில் தொடர்ந்து பூக்களின் விலை அதிகரித்துள்ளது
  • பூக்கள் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

திண்டுக்கல்:

திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் பூக்களின் தேவை அதிகரித்துள்ளதாலும் கோவில் திருவிழாக்கள் மற்றும் பண்டிகைகள் காரணமாக பெரும்பாலான பூக்கள் விலை அதிகரித்துள்ளது.

மல்லிகை கிலோ ரூ.1200, முல்லை ரூ.600, கனகாம்பரம் ரூ.300, ஜாதிப்பூ ரூ.500, செவ்வந்தி ரூ.150, சம்பங்கி ரூ.250, அரளி ரூ.250, கோழிக்கொண்டை ரூ.30, செண்டுமல்லி ரூ.35, ரோஜா ரூ.100 முதல் ரூ.130 வரை விற்பனையானது.

இதனால் மலர் சாகுபடி செய்துள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags:    

Similar News