உள்ளூர் செய்திகள்

மைக்கேல்ராஜா

தூத்துக்குடியில் கடலில் தவறி விழுந்து மீனவர் பலி

Published On 2023-06-25 14:02 IST   |   Update On 2023-06-25 14:02:00 IST
  • மைக்கேல்ராஜா நேற்று திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 10 மீனவர்களுடன் கடலில் சங்கு குளிப்பதற்காக படகில் சென்றார்.
  • திருச்செந்தூர்- காயல்பட்டினம் கடல் பகுதியில் செல்லும் போது படகில் இருந்து மைக்கேல்ராஜா திடீரென கடலில் தவறி விழுந்தார்.

தூத்துக்குடி:

தூத்துக்குடி லூர்தம்மாள்புரத்தை சேர்ந்தவர் மைக்கேல்ராஜா (வயது 26) மீனவர். இவருக்கு இசக்கியம்மாள் என்ற மனைவி உள்ளார். இவர் நேற்று திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 10 மீனவர்களுடன் கடலில் சங்கு குளிப்பதற்காக படகில் சென்றார்.

திருச்செந்தூர்- காயல்பட்டினம் கடல் பகுதியில் செல்லும் போது படகில் இருந்து மைக்கேல்ராஜா திடீரென கடலில் தவறி விழுந்தார். இதனால் அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனைக் கண்ட சக மீனவர்கள் உடனடியாக அவரை மீட்டு படகில் ஏற்றி தூத்துக்குடிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் கொண்டு செல்லப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் சிகிச்சை பலனளிக்காமல் மைக்கேல்ராஜா நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார்,

இது குறித்து கடலோர பாதுகாப்பு குழுமம் தருவைகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News