உள்ளூர் செய்திகள்

அனைத்து தேர்வுகளிலும் முதல் மதிப்பெண்ராஜேஷ்குமார் எம்.பி.யை பாராட்டிய உதயநிதி ஸ்டாலின்

Published On 2023-01-29 09:03 GMT   |   Update On 2023-01-29 09:03 GMT
  • 8 மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநாடு நடைபெற்றது.
  • முதல்-அமைச்சர் அதன் பிரமாண்டத்தை பார்த்துவிட்டு, “நான் வைத்த தேர்வில் ராஜேஸ்குமார் பாஸ் ஆகிவிட்டார்.

நாமக்கல்:

நாமக்கல்லில் நடந்த பொற்கிழி வழங்கும் விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:-

8 மாதங்களுக்கு முன்பு நாமக்கல்லில் நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கான மாநாடு நடைபெற்றது.

அந்த மாநாட்டுக்கு வந்த முதல்-அமைச்சர் அதன் பிரமாண்டத்தை பார்த்துவிட்டு, "நான் வைத்த தேர்வில் ராஜேஸ்குமார் பாஸ் ஆகிவிட்டார். ஏன் அதை தாண்டியும் சொல்கிறேன், முதல் மதிப்பெண்ணும் பெற்றுவிட்டார்" என்றார்.

அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை கிட்டத்தட்ட மாநாடு போல ஒருங்கிணைத்து நடத்திவரும் ராஜேஸ்குமார் எம்.பி.யை பார்த்து நானும் சொல்கிறேன், " நீங்கள் ஒரு தேர்வில் மட்டும் முதல் மதிப்பெண் வாங்கவில்லை, நடந்த எல்லா தேர்வுகளிலும் முதல் மதிப்பெண் வாங்கி இருக்கிறீர்கள்.

இனி நடக்கவுள்ள தேர்வுகளிலும் நீங்களே முதல் மதிப்பெண் வாங்க வேண்டும் என்ற என் விருப்பத்தையும் தெரிவித்து கொள்கிறேன்.

பொதுவாக தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காவிட்டால் மாவட்ட செயலாளர்கள் வேலை செய்ய மாட்டார்கள். ஆனால் ராஜேஸ்குமார் எம்.பி. கடந்த தேர்தலின் போது கிழக்கு மாவட்டத்தில் உள்ள 3 சட்டசபை தொகுதிகளிலும் தி.மு.க. வேட்பாளர்களை வெற்றிபெற செய்வேன் என சொன்னார். அதையே செய்தும் காண்பித்தார்.

இவ்வாறு அவர் பேசினார்.

Tags:    

Similar News