உள்ளூர் செய்திகள்

அவதானப்பட்டி ஏரியில் தீயணைப்பு -மீட்பு பணித்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி.


அவதானப்பட்டி ஏரியில் தீயணைப்பு மீட்பு பணித்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி

Published On 2023-09-03 09:47 GMT   |   Update On 2023-09-03 09:47 GMT
  • கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரியில் தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி நடந்தது.
  • பேரிடர் காலங்களில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரி அடுத்த அவதானப்பட்டி ஏரியில் கிருஷ்ணகிரி தீயணைப்பு மற்றும் மீட்பு பணித்துறை சார்பில் பேரிடர் மீட்பு, வெள்ளதடுப்பு குறித்து பாதுகாப்பு மாதிரி ஒத்திகை நிகழச்சி நடந்தது. கனமழை, வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட பருவமழை, பேரிடர் காலங்களில் ஆறுகள், ஏரிகள், குளங்கள், அணைகள் உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் குறித்து அப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், நீர் நிலைகளில் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு பாதுகாப்புடன் மீட்பது என்பது குறித்து தத்ரூபமாக தீயணைப்பு மற்றும் மீட்புபணி வீரர்கள், நிலைய அலுவலர் வெங்கடாசலம் தலைமையில் செய்து காண்பித்தனர். இதை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டனர்.

Tags:    

Similar News