உள்ளூர் செய்திகள்

களநீர் பயிற்சி நடைபெற்ற போது எடுத்த படம்


மேலநீலிதநல்லூரில் களநீர் பயிற்சி முகாம்

Published On 2022-11-12 13:57 IST   |   Update On 2022-11-12 13:57:00 IST
  • தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஜல்ஜீவன் மிஷின் சார்பாக களநீர் பயிற்சி முகாம் நடைபெற்றது.
  • ஜல்ஜீவன் மிஷன் நோக்கம், நீரின் அவசியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.

சங்கரன்கோவில்:

சங்கரன்கோவில் அருகே உள்ள மேல நீலிதநல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வாரியத்தின் தகவல் தொடர்பு மற்றும் திறன் மேம்பாட்டு பிரிவு ஜல்ஜீவன் மிஷின் சார்பாக குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர் கோபால், உதவி நிர்வாக பொறியாளர் ஆதிநாராயணன் ஆகியோர் வழிகாட்டுதலின் பேரில் களநீர் பயிற்சி முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு மேல நீலிதநல்லூர் யூனியன் சேர்மன் மாதவி தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர் வேலம்மாள் முன்னிலை வகித்தார். இப்பயிற்சி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள ஒவ்வொரு கிராம பஞ்சாயத்தில் உள்ள கிராம குடிநீர் சுகாதார உறுப்பினர்கள் 5 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு குழுவின் செயல்பாடு, ஜல்ஜீவன் மிஷன் நோக்கம், நீரின் அவசியம் குறித்து தெளிவாக விளக்கப்பட்டது.

பயிற்சியின் போது களநீர் பரிசோதனை எவ்வாறு செய்வது என்பது பற்றி ராஜேஸ்வரி கூறினார். மேலும் வெங்கடேசன், சுகுமாரன், தனசேகரன், சடையாண்டி, முருகன், ராஜேஸ்வரி, மீனாட்சி ஆகியோர் நீரின் அவசியத்தை பற்றி பயிற்சி அளித்தனர். பாண்டிச்செல்வி நன்றி கூறினார்.

Tags:    

Similar News