உள்ளூர் செய்திகள்

குடும்ப தகராறில் பெண் தற்கொலை; கணவனும் தூக்கில் தொங்கினார்

Published On 2023-01-14 14:27 IST   |   Update On 2023-01-14 14:27:00 IST
  • கணவன் மனைவி இடையே குடும்ப தகறாரு ஏற்பட்டுள்ளது.
  • தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி பாரதியார் நகர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி பிரியதர்சினி (வயது 21). இவர்களுக்கு திருமணம் ஆகி ஒன்றரை வருடங்கள் ஆகிறது.

குழந்தைகள் இல்லை. இந்நிலையில் கணவன் மனைவி இடையே குடும்ப தகறாரு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து லட்சுமணன் வீட்டை விட்டு வெளியே சென்றுவிட்டார்.

அவர் திரும்பி வந்து பார்த்தபோது பிரியதர்சினி தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது.

இதைகண்டு அதிர்ச்சியடைந்த லட்சுமணன் தானும் தூக்கில் தொங்கினார். அக்கம்பக்கத்தினர் இதை பார்த்துவிட்டு லட்சுமன்ணை மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டதன் பேரில் கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

இதேபோல சூளகிரி பகுதியை சேர்ந்த முரளி என்பவரது மனைவி சங்கீதா (25). இவர்களுக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளன.

ஐவரும் குடும்ப தகராறில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து சூளகிரி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Tags:    

Similar News