- மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
- பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை அடுத்த நாஞ்சி க்கோட்டை கன்னி தோப்பு காட்டு பகுதியில் மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் பெண் பிணம் அழுகிய நிலையில் கிடப்பதை பார்த்து அந்த வழியாக சென்றவர்கள் தஞ்சை தமிழ் பல்கலைக்கழக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பிணத்தை பார்வையிட்டு விசாரித்தனர்.
முதல்கட்ட விசாரணையில் இறந்து கிடந்தவர் தஞ்சை அடுத்த நாஞ்சிக்கோட்டை கன்னிதோப்பை சேர்ந்த பழனிவேல் மனைவி லோகநாதன் அஞ்சம்மாள் (வயது 72) என்பதும், அவரது மருமகளுடன் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு தூக்குப்போட்டு தற்கொலை செய்ததும் தெரியவந்தது.
இதனை தொடர்ந்து லோகநாதன் அஞ்சம்மாள் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சை அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது பற்றிய புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோகநாதன் அஞ்சம்மாள் தற்கொலைக்கு வேறு ஏதும் காரணமா ? என்ற பல்ேவறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.