உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே மகனை வெட்டிய தந்தை கைது

Published On 2023-03-28 10:15 GMT   |   Update On 2023-03-28 10:15 GMT
  • முனியப்பிள்ளை மகன் மூர்த்தி (வயது 17). கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார்.
  • முனியப்பிள் ளைக்கும், அவரது மகன் மூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்த பூட்டை கிராமத்தை சேர்ந்தவர் முனியப்பிள்ளை மகன் மூர்த்தி (வயது 17). கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். உறவினர் வீட்டு விசேஷத்திற்காக சொந்த ஊருக்கு வந்தார்   இந்நிலையில் இவரது தந்தை முனியப்பிள்ளை (60) வீட்டின் கட்டிலில் படுத்துக் கொண்டிருந்தபோது துணி விலகி இருந்ததாக தெரிகிறது. இதை பார்த்த அங்கிருந்த வர்கள் அவர் மீது துணியை போட்டுள்ளனர்  இதனால் முனியப்பிள் ளைக்கும், அவரது மகன் மூர்த்திக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த முனியப்பிள்ளை அருகில் இருந்த அரிவாளை எடுத்து மகன் என்றும் பாராமல் மூர்த்தியை வெட்டினார் இதில் காயமடைந்த மூர்த்தி கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்த புகாரின்பேரில் சங்கராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முனியப்பிள்ளையை கைது செய்தனர்.

Tags:    

Similar News