உள்ளூர் செய்திகள்
ஆகாயதாமரை செடிகளை அகற்ற விவசாயிகள் கோரிக்கை
- வெள்ளநீர் வடியாமல் வயல்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
- ஆகாயதாமரை செடிகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தாலுகா, முத்துப்பேட்டை ஒன்றியத்திற்குட்பட்ட நாச்சிகுளம் மற்றும் இடும்பவனம் பகுதியில் செல்லும் கழனியாறு, புதிய மற்றும் பழைய கிளைதாங்கியாறு, மரைக்கா கோரையாறு ஆகியவற்றில் ஆகாயதாமரை செடிகள் மண்டியுள்ளதால் மழை காலங்களில் வெள்ளநீர் வடியாமல் வயல்களில் தேங்கி பயிர்கள் பாதிக்கும் அபாயம் உள்ளது.
செடிகளை அகற்றி குளத்தை சீரமைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அதனைத் தொடர்ந்து உதவி செயற்பொறியாளர் சங்கர், முருகையன் மாவட்ட விவசாய சங்க துணைத்தலைவர் மற்றும் விவசாயிகளுடன் சென்று பார்வையிட்டு ஆகாயதாமரை செடிகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.