உள்ளூர் செய்திகள்

நீலகிரியை இயற்கை மாவட்டமாக மாற்ற விவசாயிகளுக்கு விழிப்புர்ணவு ஏற்படுத்த வேண்டும்-கலெக்டர் அம்ரித் பேச்சு

Published On 2022-08-25 15:32 IST   |   Update On 2022-08-25 15:32:00 IST
  • மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை செயற்குழு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைைமயில் நடந்தது.
  • தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல் திட்டத்தை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

ஊட்டி,

நீலகிரி மாவட்ட கலெக்டர் கூடுதல் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான இயற்கை வேளாண்மை செயற்குழு கூட்டம் கலெக்டர் அம்ரித் தலைைமயில் நடந்தது.

கூட்டத்தில் நீலகிரியை இயற்கை மாவட்டமாக மாற்றுவதற்கு தயாரிக்கப்பட்ட செயல் திட்ட அறிக்கை விரிவாக எடுத்துரைத்ததை கேட்டறிந்து, செயல் திட்டத்தின் ஆக்க கூறுகளை தனித்தனியாக ஆய்வு செய்தார். மேலும் தோட்டக்கலைத்துறையின் மூலம் செயல் திட்டத்தை நிறைவேற்ற எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

கூட்டத்தில் கலெக்டர் அம்ரித் பேசியதாவது:-

மாவட்ட அளவிலான செயற்குழுவை மறுசீரமைக்கவும், துணை குழுக்கள் உருவாக்குமாறும், இயற்கை மாவட்டமாக மாற்றுவதற்கு அதிகளவில் விவசாயிகளுக்கு விழிப்பு ணர்வு பயிற்சிகள் வழங்க வேண்டும்.

இயற்கை விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளின் நிலங்க ளை தொடர்ச்சி யாக சம்பந்தப்பட்ட அலு வலர்கள் கண்காணி ப்பதோடு, குழுக்கள் அமைக்குமாறும், இயற்கை வழியில் விளைவிக்கப்படும் காய்கறிகளை சந்தைப்ப டுத்த விரிவாக செயல்திட்டம் தயார் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) ஷிபிலாமேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் வாஞ்சிநாதன், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News