உள்ளூர் செய்திகள்

குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் சாந்தி பேசிய காட்சி.

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

Published On 2023-08-26 15:20 IST   |   Update On 2023-08-26 15:20:00 IST
  • மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு 400.50 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டது.
  • 63 பட்டு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1050 வீதம் ரூ. 10.13 லட்சம் மானியத்தொகை வழங்கப்பட்டது.

தருமபுரி, 

தருமபுரி மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் சாந்தி, தலைமையில் மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் நடை பெற்றது. அப்போது அவர் விவசாயிகளின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் பேசியதாவது:-

தருமபுரி மாவட்டத்தில் ஜனவரி முதல் ஆகஸ்ட்-2023 திங்கள் வரையிலான காலத்திற்கான இயல்பான மழையளவு 366.7 மி.மீ ஆகும். தற்பொழுது வரை இந்த ஆண்டு 380.9 மி.மீ மழை பெய்துள்ளது. தருமபுரி மாவட்டத்தில் வேளாண்மை உழவர் நலத் துறையில் 2023-2024 ஆம் ஆண்டிற்கு 1.72,270 ஹெக்டேர் பரப்பளவில் நெல், சிறுதானியங்கள். பயிறு வகைகள் உள்ளிட்ட உணவு தானிய பயிர்கள் மற்றும் எண்ணெய் வித்துக்கள், பருத்தி, கரும்பு சாகுபடி பரப்பாக இலக்கு நிர்ணயிக்கப் பட்டதில் தற்பொழுது வரை 40,909.8 ஹெக்டேர் பரப்பு சாகுபடி செய்யப்பட்டு உள்ளது.

அனைத்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களிலும் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டு உள்ளதால், விவசாயிகள் தேவையான விதைகளை பெற்று பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், தருமபுரி மாவட்–டத்தில் பட்டு வளர்ச்சித்துறையின் மூலம் 721 ஏக்கர் மல்பரி சாகுபடி இலக்காக நிர்ணயிக்கப்பட்டு 400.50 ஏக்கர் மல்பரி பயிரிடப்பட்டது. இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பல்வேறு துறை அலு–வலர்களுடன் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மேலும். இக்கூட்டத்தில் தமிழ்நாடு மின்சார வாரியம், மீன்வளத்துறை, கால்நடை பாரமரிப்புத்துறை உள்ளிட்ட பல்வேறு துறை சார்ந்த கோரிக்கைகள் குறித்து விவ சாயிகளிடம் இருந்து பெறப் பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ள தொடர்புடைய துறை அலுவலர்களுக்கு அறிவுறுத் தப்பட்டு உள்ளது.

இக்கூட்டத்தில் பட்டு வளர்ச்சிதுறையின் மூலம் மாநில திட்டத்தின்கீழ் 96.50 ஏக்கர் மல்பெரி நடவு மேற்கொண்டுள்ள 63 பட்டு விவசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு ரூ.1050 வீதம் ரூ. 10.13 லட்சம் மானியத்தொகை யினையும். பட்டு புழுவளர்ப்பு மனை அமைத்து புழுவளர்ப்பு மேற்கொண்டு வரும் 5 பட்டு விவசாயிகளுக்கு தலா ரூ.1.20 லட்சம் வீதம் மானியத்தொகை ரூ.6 லட்சத்தையும் மாவட்ட , கலெக்டர் சாந்தி வழங்கினார்.

இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் (பொ) பிரியா, வேளாண்மை இணை இயக்குநர் விஜயா, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குநர் சாமிநாதன், வேளாண்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் மாது. தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் பாத்திமா உட்பட தொடர்புடைய அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் மற்றும் விவ–சாயிகள் கலந்து கொண்டனர்.

Similar News