உள்ளூர் செய்திகள்
நெல்லையில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் - நாளை மறுநாள் நடக்கிறது
- கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.
- அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர்.
நெல்லை:
நெல்லை மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது:-
நெல்லை மாவட்டத்தில் இந்த மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை மறுநாள்(வெள்ளிக்கிழமை) மாவட்ட கலெக்டர் கார்த்தி கேயன் தலைமையில் நடக்கி றது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் 2-வது தளத்தில் உள்ள கூட்டரங்கில் வைத்து காலை 11 மணிக்கு கூட்டம் நடைபெற உள்ளது.
இக்கூட்டத்தில் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொண்டு விவசாயிகளின் கோரிக்கைகளின் மீது எடுக்கப்பட்டுள்ள நட வடிக்கைகள் குறித்து தெரிவிக்க உள்ளனர். எனவே விவசாயிகள் குறை தீர்ப்பதற்காக நடைபெறும் இந்த கூட்டத்தில் நெல்லை மாவட்ட விவசாயிகள் மற்றும் அனைத்து துறை அலுவலர்களும் கலந்து கொள்ள வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.