விவசாயிகள் பெருவிழா நடைபெற்றபோது எடுத்தபடம்.
பேய்க்குளத்தில் விவசாயிகள் பெருவிழா
- வேளாண்மை இயக்கத்தின் மூலம் விவசாயிகள் பெருவிழா பேய்க்குளத்தில் நடைபெற்றது.
- தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் பயிற்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
சாத்தான்குளம்:
தமிழ்நாடு அரசு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கத்தின் மூலம் விவசாயிகள் பெருவிழா பேய்க்குளத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர்அல்லிராணி பயிற்சிகளை வழங்கினார். பயிற்சியை தூத்துக்குடி வேளாண்மை இணை இயக்குனர் முகைதீன் தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
தூத்துக்குடி உழவர் பயிற்சி நிலைய வேளாண்மை துணை இயக்குனர் ஜெயசெல்வின் இன்பராஜ் உழவர்களுக்கான பயிற்சி மற்றும் பயிற்சி முறைகள் பற்றியும், கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் பேராசிரியர் (பூச்சியியல்) ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை பயன்பாடு,பயிர்களை பூச்சி நோய்கள் மேலாண்மை முறைகள் பற்றியும்,ஓய்வுபெற்ற மேலாண்மை கூடுதல் இயக்குனர் மகாதேவன் இயற்கை மற்றும் நுண்ணூட்ட வளங்கள் பற்றியும், ஸ்பிக் நிறுவனத்தின் விக்னேஷ் மண் மாதிரி எடுக்கும் முறைகள், உரமிடுதல் முறைகள் பற்றியும் பேசினார். தமிழ்நாடு பனை பாதுகாப்பு மற்றும் தொழிலாளர் மேம்பாட்டு நிறுவன மாநில தலைவரும் மதர் சமூக சேவை நிறுவன இயக்குனருமான டாக்டர் கென்னடி பனை பாதுகாப்பு பற்றி பேசினார்.
இதில் கருங்கடல் ஊராட்சி மன்ற தலைவர் நல்லதம்பி ஒன்றிய கவுன்சிலர் பழனியப்பபுரம் காந்திமதி உட்பட விவசாயிகள் 120 பேர் கலந்து கொண்டனர். ஆழ்வார்திருநகரி துணை வேளாண்மை அலுவலர் தங்க மாரியப்பன் நன்றி கூறினார். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உதவி வேளாண்மை அலுவலர்கள் அட்மா திட்ட பணியாளர்கள் செய்திருந்தனர்.