உள்ளூர் செய்திகள்

குன்னூரில் இன்று விவசாயிகள் உண்ணாவிரத போராட்டம்

Published On 2022-09-14 10:16 GMT   |   Update On 2022-09-14 10:16 GMT
  • பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 ரூபாய் வழங்க வேண்டும்
  • தேயிலை தூளுக்கு 150 ரூபாய்க்கு குறையாமல் ஏலம் எடுக்க வேண்டும்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டத்தில் பிரதான தொழிலாக தேயிலை விவசாயம் செய்யப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் முக்கிய வாழ்வாதாரமாக உள்ள பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலையாக ரூபாய் 30 வழங்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளை கண்டித்து குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே மலை மாவட்ட சிறு விவசாயிகள் சங்கத்தினர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சமீப காலத்தில் பசுந்தேயிலைக்கு உரிய விலை நிர்ணயம் செய்யாத நிலையில் மலை மாவட்ட சிறு, குறு விவசாயிகள் சார்பில் பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு இதுவரை எந்த தீர்வும் காணப்படாத நிலையில் இன்று உண்ணாவிரத. போராட்டம் நடைபெற்றது.

அப்போது பசுந்தேயிலைக்கு குறைந்தபட்ச விலை 30 ரூபாய் வழங்க வேண்டும். தேயிலை ஏல மையத்தில் செயற்கை வணிகத்தை மத்திய அரசு விசாரித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தேயிலை ஏல மையங்களில் குறைந்தபட்சம் தேயிலை தூளுக்கு 150 ரூபாய்க்கு குறையாமல் ஏலம் எடுக்க வேண்டும்.

கலப்பட‌ தேயிலை தூளினால் தேயிலை விவசாயம் பாதிக்கப்படுகிறது மற்றும் தேயிலை தோட்டங்களில் ஊடுபயிராக உள்ள சில்வர் ஓக் மரங்களை வெட்ட அனுமதி வழங்க வேண்டும் உட்பட‌ பல கோரிக்கைகளை வலியுறுத்தி மாபெரும்‌உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது.இதில் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இருந்து பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர்.

Tags:    

Similar News