உள்ளூர் செய்திகள்
தென்காசியில் வாழைத்தார் விலை அதிகரிப்பால் விவசாயிகள் மகிழ்ச்சி
- வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளதோடு, விலையும் 2 மடங்கு உயர்ந்தது.
- செவ்வாழை ஒரு தார் ரூ. 900 வரை விற்பனையானது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் தொடர் மழையால் வாழைத்தார்கள் வரத்து அதிகரித்துள்ளதோடு, விலையும் 2 மடங்கு உயர்ந்ததன் காரணமாக வாழை விவசாயிகள் மகிழ்ச்சிஅடைந்துள்ளனர்.
தென்காசி குத்துக்கல்வலசை வாழைத்தார், இலை மார்க்கெட்டில் வழக்கத்தை காட்டிலும் விவசாயிகள் அதிகளவில் வாழைத்தார்கள் கொண்டு வந்திருந்தனர். செவ்வாழை ஒரு தார் ரூ. 900 வரை விற்பனையானதால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர். வாழைத்தார்களை வாங்குவதற்கு உள்ளூர் வியாபாரிகள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் முகாமிட்டு வாங்கிச் சென்றனர்.