உள்ளூர் செய்திகள்

சாம்பவர்வடகரை அருகே விவசாயி தற்கொலை

Published On 2022-07-16 09:09 GMT   |   Update On 2022-07-16 09:09 GMT
  • இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர்.
  • சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார்.

சாம்பவர்வடகரை:

சாம்பவர்வடகரை அருகே உள்ள திருச்சிற்றம்பலத்தை சேர்ந்த பாக்கியராஜ் (வயது 29), விவசாயி. இவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உள்ளனர். மனைவி சத்தியசெல்வி.

அவரது குடும்பத்தில் அடிக்கடி பிரச்சினைகள் இருப்பதால் மது குடித்துவிட்டு வந்து வயலுக்கு அடிக்க வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்து எடுத்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார்.

உடனே சாம்பவர் வடகரை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டார். சாம்பவர்வடகரை சப்-இன்ஸ்பெக்டர் காசி விஸ்வநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News