உள்ளூர் செய்திகள்
மோட்டர்சைக்கிள் மோதி விவசாயி பலி
- குட்டப்பட்டி அருகே கடந்த 1-ந் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்தார்
- மோட்டார்சைக்கிளில் நபர் மாது மீது மோதியதில் மாது சம்பவ இடத்திலேயே இறந்தார்.
காவேரிப்பட்டணம்,
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணம் அருகே பன்னிஅள்ளி பக்கமுள்ள பன்னிஅள்ளிபுதூரை சேர்ந்தவர் மாது (வயது 50). விவசாயி. இவர் பாலக்கோடு காவேரிப்பட்டணம் சாலையில் குட்டப்பட்டி அருகே கடந்த 1-ந் தேதி இரவு நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த நேரம் அவ்வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த நபர் மாது மீது மோதினார்.
இதில் பலத்த காயம் அடைந்த மாது சம்பவ இடத்திலேயே இறந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் காவேரிப்பட்டணம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.