உள்ளூர் செய்திகள்

திருநாவலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2022-09-11 07:46 GMT   |   Update On 2022-09-11 07:46 GMT
  • திருநாவலூர் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
  • நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது.

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை தாலுகா பரவநந்தல் கிராமத்தை சேர்ந்தவர் சுப்ரமணி (வயது 64). விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவர். இவர் மனைவி மகன், மகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில் இவருக்கு நீண்ட நாட்களாக வயிற்று வலி இருந்து வந்ததாக தெரிகிறது. இதனால் சம்பவத்தன்று தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு மன உளைச்சலில் இருந்த சுப்பிரமணி வீட்டிலிருந்த விவசாய நிலத்திற்கு அடிக்க வைத்திருக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.

இதை வீட்டில் இருந்தவர்கள் பார்த்து அதிர்ச்சியடைந்து சுப்பிரமணியை மீட்டு சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் இன்று காலை சிகிச்சை பலனின்றி சுப்பிரமணி இறந்தார். இது குறித்து சுப்பிரமணியின் மகன் நாகராஜ் திருநாவலூர் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் திருநாவலூர் சப்-இன்ஸ்பெக்டர் மணிமேகலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்ற–னர். 

Tags:    

Similar News