உள்ளூர் செய்திகள்

பண்ருட்டியில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை

Published On 2023-03-09 14:58 IST   |   Update On 2023-03-09 14:58:00 IST
  • ராஜி (வயது 45), விவசாயி. இவர் நேற்று புதிதாக மோட்டார சைக்கிள் வாங்க மனைவியிடம் பணம் கேட்டார். அவர் மனைவி பணமில்லை என வாங்கிதர மறுத்திருக்கிறார்,
  • அப்போது ராஜி தன் நிலத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிமருந்தை குடித்தார்,

கடலூர்:

பண்ருட்டி திருவதிகை திரவுபதி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராஜி (வயது 45), விவசாயி. இவர் நேற்று புதிதாக மோட்டார சைக்கிள் வாங்க மனைவியிடம் பணம் கேட்டார். அதற்கு தற்பொ ழுது பணம் இல்லை பிறகு வாங்கிக் கொள்ளலாம் என்று அவரது மனைவி கூறியுள்ளார்.

அப்போது ராஜி தன் நிலத்திற்கு சென்று அங்கிருந்த பூச்சிமருந்தை குடித்தார். மயங்கிய நிலையில் கிடந்த அவரை மீட்டு பண்ருட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக் காக சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு கொண்டு செல்லப் பட்டார். அங்கு சிகிச்சை பலன்அளிக்காமல் நள்ளிரவு ராஜி உயிரிழந்தார். இதுகுறித்து பண்ருட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News